அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் பரிசோதிக்கப்படும்!

Date:

அடுத்த வாரம் முதல் பாடசாலை புத்தகப் பைகளை பரிசோதிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாடசாலைகளில் பாடசாலைப் பைகளை பரிசோதிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு தெரியாமல் போதைப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...