அரிசி,பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைப்பு!

Date:

ச.தொ.ச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புடன் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் பசந்த யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, துவரம் பருப்பு, பூண்டு மற்றும் கோதுமை மா போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள ச.தொச. கடைகளின் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை கொண்டைக்கடலை 185 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு ஒரு கிலோ 194 ரூபாவுக்கும், ஒரு கிலோ சிவப்பு பருப்பு 429 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை சீனி 279 ரூபாவுக்கும் ச.தொ.ச ஊடாக மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...