உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ‘எல்ல ஒடிஸி’ ரயில் பயணங்கள் அதிகரிப்பு!

Date:

கண்டியில் இருந்து எல்ல வரையிலான புதிய ரயில் சேவையான ‘எல்ல ஒடிஸி’க்கு என இரண்டு ரயில் பயணங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் சேர்த்துள்ளது.

எல்ல ஒடிஸி ரயில் சேவையின் கூடுதல் ரயில் பயணங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என ரயில்வே துணை செயல்பாட்டுக் கண்காணிப்பாளர் வி.எஸ். பொல்வட்டகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வியாழனன்றும், ‘எல்ல ஒடிஸி’ கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் பதுளையிலிருந்து திரும்பும் பயணத்தை மேற்கொள்ளும்.

மேலும், உள்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகமாக இருந்ததால் மேலும் இரண்டு ரயில் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொல்வத்தகே கூறினார்

பயணிகளின் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே ஆசன முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...