உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ‘எல்ல ஒடிஸி’ ரயில் பயணங்கள் அதிகரிப்பு!

Date:

கண்டியில் இருந்து எல்ல வரையிலான புதிய ரயில் சேவையான ‘எல்ல ஒடிஸி’க்கு என இரண்டு ரயில் பயணங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் சேர்த்துள்ளது.

எல்ல ஒடிஸி ரயில் சேவையின் கூடுதல் ரயில் பயணங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என ரயில்வே துணை செயல்பாட்டுக் கண்காணிப்பாளர் வி.எஸ். பொல்வட்டகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வியாழனன்றும், ‘எல்ல ஒடிஸி’ கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் பதுளையிலிருந்து திரும்பும் பயணத்தை மேற்கொள்ளும்.

மேலும், உள்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகமாக இருந்ததால் மேலும் இரண்டு ரயில் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொல்வத்தகே கூறினார்

பயணிகளின் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே ஆசன முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...