சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!

Date:

சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றத்துக்கான அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தற்போது அதிகரித்துள்ள மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதன்போது வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கு, வைத்தியர்களுக்கு விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...