தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூபுக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

Date:

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இன்டர்நேஷ்னல் ஸ்டார் புக் ரிக்கார்ட்ஸ் விழாவில் ‘ஸ்ரீ ருத்ரக் ஷா’ கலை நடன பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அரவிந்த் குமார் இந்த விருதை வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் பேராசிரியை முகம்மது பாத்திமாவுக்கு மதிப்புறு முனைவர் ( டாக்டர் ) பட்டம் வழங்கப்பட்டது.

பிராமண சமுதாயத்தை சேர்ந்த இவர் இஸ்லாத்தில் இணைந்து 1991ல் திருப்பூர் சையத் மஹபூபை மணமுடித்து 6 பட்டங்களை வென்று கல்விச் சேவையாற்றி வருகிறார்.

மேலும், இவ்விழாவில் மேலும் நால்வருக்கு இன்டர் நேஷனல் ஸ்டார் விருதுகளும் ஆசிரியப் பெருமக்கள் 24 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...