நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

Date:

பண்டாரவளை, ஹல்துமுல்ல – லைபான் பிரிவு சன்வௌி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்நத வந்த மதுசங்க சாகர என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக  மூன்று நண்பர்களுடன் சனிக்கிழமை (03) மாலை குறித்த இடத்துக்கு அவர் சென்றுள்ளார்.

அங்கிருந்து செல்ஃபி எடுப்பதற்கு முயன்ற போது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியில்  விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் பள்ளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...