உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ‘எல்ல ஒடிஸி’ ரயில் பயணங்கள் அதிகரிப்பு!

Date:

கண்டியில் இருந்து எல்ல வரையிலான புதிய ரயில் சேவையான ‘எல்ல ஒடிஸி’க்கு என இரண்டு ரயில் பயணங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் சேர்த்துள்ளது.

எல்ல ஒடிஸி ரயில் சேவையின் கூடுதல் ரயில் பயணங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என ரயில்வே துணை செயல்பாட்டுக் கண்காணிப்பாளர் வி.எஸ். பொல்வட்டகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வியாழனன்றும், ‘எல்ல ஒடிஸி’ கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் பதுளையிலிருந்து திரும்பும் பயணத்தை மேற்கொள்ளும்.

மேலும், உள்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகமாக இருந்ததால் மேலும் இரண்டு ரயில் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொல்வத்தகே கூறினார்

பயணிகளின் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே ஆசன முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...