நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

Date:

பண்டாரவளை, ஹல்துமுல்ல – லைபான் பிரிவு சன்வௌி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்நத வந்த மதுசங்க சாகர என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக  மூன்று நண்பர்களுடன் சனிக்கிழமை (03) மாலை குறித்த இடத்துக்கு அவர் சென்றுள்ளார்.

அங்கிருந்து செல்ஃபி எடுப்பதற்கு முயன்ற போது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியில்  விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் பள்ளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...