மகிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற மீலாத் வைபவம்!

Date:

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்ற நிலையில்,

இலங்கையிலும் பல பகுதிகளிலும் இதனை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோர்களும் பரந்த பட்டத்தில் செய்து வருகின்றனர்.

அதற்கமைய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், உட்பட , முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார்,அஸ்ஸெய்யித்.ஹஸன் மௌலானா இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அரசியல் களம் தள்ளாடிக் கொண்டிருக்கும் சூழலில், மீலாத் போன்ற சந்தர்ப்பங்களும் நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு களமாக,தளமாக மாறி வருவது அவதானிக்கக் தக்கதாகும்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...