லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

Date:

லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் ரூ.7.5 பில்லியனை திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் முதல் வாரத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

“லிட்ரோ எரிவாயு நிறுவனம், நாங்கள் உறுதியளித்தோம், உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகை இன்னும் பெறப்படுகிறது. ஆனால் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க நாங்கள் ஆரம்ப பங்குகளைப் பயன்படுத்தினோம். நாங்கள் மீண்டும் ரூபாயில் செலுத்தத் தொடங்கினோம். செப்டம்பரில் நாங்கள் 6.5 பில்லியன் செலுத்தினோம். ஒக்டோபரில் 7 பில்லியன் சொலுத்தினோம். வெள்ளிக்கிழமை இறுதிக்குள் மேலும் 7.5 பில்லியனை செலுத்திவிட்டோம். லிட்ரோ எரிவாயு நிறுவனம் என்ற வகையில் இது எங்கள் பொறுப்பு. எஞ்சியுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்திவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக இந்த நேரத்தில், உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நாங்கள் அவதானித்து வருகிறோம். அதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில் எரிவாயு விலையை மீண்டும் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம்” என முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 05ஆம் திகதி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 271 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 4,280ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...