எரிக் சொல்ஹெய்முக்கு தனி அலுவலகம்!

Date:

இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இலங்கையில் காலநிலை மாற்ற செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் உலகில் பல நாடுகள் இவ்வாறான செயலகங்களை நிறுவியுள்ளதாகவும், எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அந்த நாடுகளும் நிதி சேகரித்துள்ளதாக ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் திட்டங்களை தயாரிப்பதே இந்த செயலகத்தை நிறுவியதன் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தயாரித்து நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன், இந்த செயற்பாடுகளும் இந்த செயலகத்தினால் மேற்கொள்ளப்படும்.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் காலநிலை மாற்ற செயலகத்தின் பணிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள (COP 27) உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...