புத்தளம் அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

புத்தளம் அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா ஷரிஆ பிரிவு 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்  மத்ரஸா கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம் ஜுனைதீன் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அத்தோடு அல் மத்ரஸத்துல் இஸ்லாமிய்யாவின் முன்னாள் அதிபர் சகோதரர் எம்.எச் அப்துல் ரஷீத் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.எச் ஹனஸ் முஹியுத்தீன் அஷ்ஷெய்க் A.O அப்துல் கஹ்ஹார் அஷ்ஷெய்க் M.R.M இர்பான் அவர்களும் மத்ரஸாவின் உப அதிபர் அஷ்ஷெய்க் M.S.M நஸ்ருதீன் மற்றும் ஷரீஆ பகுதி முஅல்லிமாக கடமையாற்றும் அஷ்ஷெய்க் S.H.ஸல்மான் பாரிஸ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வை அஷ்ஷெய்க் A.R.M முபாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மத்ரஸா முஅல்லிமாவாக கடமையாற்றும் மௌலவியா உம்மு அதிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...