மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மேலதிகமாக 4 பில்.ரூபா ஒதுக்கீடு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, தற்போது மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர் குழுவிற்கு மேலதிகமாக மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பூரண சத்தான உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்  தெரிவித்தார்.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியை வழங்குவதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...