மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மேலதிகமாக 4 பில்.ரூபா ஒதுக்கீடு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, தற்போது மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர் குழுவிற்கு மேலதிகமாக மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பூரண சத்தான உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்  தெரிவித்தார்.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியை வழங்குவதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...