மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்டவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரால் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான பொருட்கள் இன்று (09) பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களால் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர், கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் உட்பட பௌத்த மதகுருவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டிலும் முஅஸ்கர் நிர்வாகத்தினரால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...