ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து தன்னை நீக்கியமையை சவாலுக்கு உட்படுத்தி துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிப்பதற்கே இருவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதால், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.
இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்புரிமையும் பறிக்கப்பட்டது.