வசந்த மற்றும் சிறிதம்ம தேரரைச் சந்தித்த மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அழைப்பாளர்  கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதியில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ‘சட்டவிரோத நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற மற்றும் அடக்குமுறையான சூழ்நிலை என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் இருவரும் கைதிகளின் உடல்நிலையை அவதானிக்கச் சென்றதாகவும், கல்வெவ சிறிதம்ம தேரரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...