வசந்த மற்றும் சிறிதம்ம தேரரைச் சந்தித்த மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அழைப்பாளர்  கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதியில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ‘சட்டவிரோத நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற மற்றும் அடக்குமுறையான சூழ்நிலை என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் இருவரும் கைதிகளின் உடல்நிலையை அவதானிக்கச் சென்றதாகவும், கல்வெவ சிறிதம்ம தேரரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...