போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்: நாமல்

Date:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம், தனது வீடு, மனைவி வீடு மற்றும் தந்தையின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு வந்த இளைஞர், சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.

அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்த வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...