இலகுவான ஆடைகளுக்கு மாறிய ஆசிரியர்கள்!

Date:

இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக சட்டை, பாவாடை -மேலாடை, பேன்ட், குர்தா போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார பணவீக்கம் காரணமாக புடவைகளின் விலை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக சேலை அணிந்து பணிக்குச் செல்வது சிரமமாக உள்ளதாகவும், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கலாம் எனவும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த அனுமதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும்போது தங்களை அன்புடன் கட்டிப்பிடித்ததாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், புடவைக்கு பதிலாக பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், மகாசங்கரத்ன அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...

இலங்கையில் டித்வா சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்.

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்...

துருக்கியில் விமான விபத்து: லிபியா நாட்டின் இராணுவ தளபதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின்...