எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய தமது அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது: அரபு இராச்சியத்தின் தூதுவர்

Date:

இலங்கை பிரதமர் தினஷ் குணவர்த்தனவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரிக்கும் பிரதமர் அலுவலகத்தில் இன்று   கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அரபு இராச்சியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அரசாங்கம் சார்பாக பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதி

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு,...

இன்றைய தினமும் வறட்சியான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை...

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...