குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள தயார்!

Date:

குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இதுவரை குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. IDH வைத்தியசாலையில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...