‘டேட்டா’ கட்டணங்கள் அதிகரிப்பால் மக்களுக்கு பெரும் பாதிப்பு: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Date:

கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இன்று பலர் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாடல்களை கேட்கிறார்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டேட்டா  மூலம் கல்வியைப் பெறுகிறார்கள் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே கையடக்க தொலைபேசி கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு ஊடகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...