இலகுவான ஆடைகளுக்கு மாறிய ஆசிரியர்கள்!

Date:

இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக சட்டை, பாவாடை -மேலாடை, பேன்ட், குர்தா போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார பணவீக்கம் காரணமாக புடவைகளின் விலை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக சேலை அணிந்து பணிக்குச் செல்வது சிரமமாக உள்ளதாகவும், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கலாம் எனவும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த அனுமதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும்போது தங்களை அன்புடன் கட்டிப்பிடித்ததாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், புடவைக்கு பதிலாக பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், மகாசங்கரத்ன அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம்...

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில்...

நம்பிக்கை தரும் ரமழான்: தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை...

இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள...