இலகுவான ஆடைகளுக்கு மாறிய ஆசிரியர்கள்!

Date:

இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக சட்டை, பாவாடை -மேலாடை, பேன்ட், குர்தா போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார பணவீக்கம் காரணமாக புடவைகளின் விலை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக சேலை அணிந்து பணிக்குச் செல்வது சிரமமாக உள்ளதாகவும், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கலாம் எனவும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த அனுமதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும்போது தங்களை அன்புடன் கட்டிப்பிடித்ததாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், புடவைக்கு பதிலாக பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், மகாசங்கரத்ன அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...