சஜித்துடன் இணைந்தாக வெளிவரும் செய்திகள் தவறானவை: சுதர்ஷினி

Date:

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் கூட்டணியில் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே  அறிவித்தல் விடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுவாக எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சபாநாயகர் பட்டியலில் நேரம் ஒதுக்குவது போன்ற விடயங்களை கலந்துரையாடுவதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன்  கூட்டணி வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதிக்கு தான் தெளிவாக ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

தான் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...