‘டேட்டா’ கட்டணங்கள் அதிகரிப்பால் மக்களுக்கு பெரும் பாதிப்பு: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Date:

கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இன்று பலர் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாடல்களை கேட்கிறார்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டேட்டா  மூலம் கல்வியைப் பெறுகிறார்கள் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே கையடக்க தொலைபேசி கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு ஊடகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...