பாடசாலை புத்தகங்களை அச்சடிக்கும் செலவு 7 மடங்கு அதிகரித்துள்ளது

Date:

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 16,000 மில்லியன் செலவாகும் என கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐலப்பெரும தெரிவிக்கின்றார்.

இந்த ஆண்டுக்கான மொத்த செலவு 2,338 மில்லியன் ஆகும், அதாவது அடுத்த ஆண்டுக்கான செலவு ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

வரவிருக்கும் கல்வியாண்டுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 45% அச்சிடுவதற்கு மாநில அச்சகக் கூட்டுத்தாபனம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும், அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு இந்தியக் கடன் திட்டத்தின் மூலம் தேவையான காகிதத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மீதமுள்ள 55 வீதம் தனியார் துறை அச்சிடும் இதற்காக 22 தனியார் துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...