புடவையை மாற்ற முயற்சிக்கு ஆசிரியர்களுக்கு அரசாங்கம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!

Date:

புடவை அல்லது ஒசரி அல்லாத வேறு  ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பாடசாலைச் சூழல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தில் தொடர்புபட்டுள்ளது அதனால் ஆசிரியர்கள் புடவையிலோ அல்லது ஒசரி புடவையிலே பாடசலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்

மேலும் சட்ட விதிகளுக்கும் கலாசாரத்துக்கு ஏற்றவகையில் பாடசாலை காணப்பட வேண்டும், இதற்கு முரானான கருத்துக்களை வெளியிடும் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படும் அங்கத்தவர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையை மாற்றும் முயற்சி தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் கருத்து வெளியிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...