மேலும் 5500 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க்!

Date:

ட்விட்டரின் ஊழியர்களில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எலான் மஸ்க் அதிரடியாக நீக்க உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ.3.50 இலட்சம் (இந்திய ரூபா) கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

இந்நிலையில், முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர்,  அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் தமது பணியை இழந்தனர்.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Popular

More like this
Related

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...