இலங்கையில் வன விலங்குகளால் வருடத்திற்கு சுமார் 54 பில்லியன் பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதன்போது காட்டு யானைகள், மயில்கள், குள்ளநரிகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதாக அவர் கூறினார்.
மேற்படி விலங்குகளில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.