2022 பிஃபா உலகக் கிண்ணம்: இஸ்ரேல் டெல் அவிவிலிருந்து டோஹாவுக்கான விசேட விமான சேவைக்கு கட்டார் அனுமதி!

Date:

கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையை முன்னிட்டு , முறையான தூதரக உறவுகள் இல்லாத இஸ்ரேல் மற்றும் கத்தார் இடையே நேரடி விசேட விமானங்கள் இயக்கப்படும் என்று ஃபிஃபா நேற்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து டோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் வரை செல்லும் விமானங்களில் போட்டி டிக்கெட்டுகள் மற்றும் ஹய்யா ரசிகர் ஐடியை வைத்திருப்பவர்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை FIFA நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒன்றாக பயணம் செய்யவும் ஒன்றாக கால்பந்தாட்டத்தை கண்டு களிக்கவும் முடியும் என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியில் வசிக்கும் எந்த பாலஸ்தீனியர்களுக்கு இந்த அனுமதி பொருந்தும் என்று அந்த குறித்த அறிக்கை குறிப்பிடவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீனிய டிக்கெட் வைத்திருப்பவர்களும் ஊடகங்களும் இந்த பட்டய விமானங்களில் எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்க முடியும்.

ஏனெனில் அவர்களுக்கும் போட்டியை கண்டு களிக்கும் சம உரிமை உள்ளது, என கத்தாரின் போட்டி ஏற்பாட்டாளர், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...