காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது!

Date:

பெய்லர் பாலம் அமைப்பதற்காக காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

அதேநேரம் காலி வீதி மூடப்படுவது தொடர்பான விபரங்கள் மற்றும் மாற்று வழிப்பாதைகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனச் சாரதிகளுக்கு அறிவிக்கவுள்ளது.

காலி வீதியின் மக்கொன ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளமையினால் அதனை புனர்நிர்மாணம் செய்வதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நீண்ட காலமாகியும் பாலம் திருத்தப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜத் அவர்கள் இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் தற்போதுள்ள சேதமடைந்த பாலத்தை அகற்றி அதற்குப் பதிலாக தற்காலிகமாக பெய்லர் பாலம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெய்லர் பாலம் அமைப்பதற்கு காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகாரி சபை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், அம்ஜாத் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...