அடுத்த ஆண்டு முதல் மீனவர்களுக்கு மின்சார இயந்திர படகுகள்

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த ஆண்டு முதல் மின்சார இயந்திர படகுகளை மீனவர்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

சிறியளவிலான மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 86 ரூபா மட்டுமே செலவாகும் மின்கலங்களில் 100 கிலோமீற்றர் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசலில் இயங்கும் படகுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகளை பொருத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக குறிப்பிட்ட நடமாடும் சேவையை அமைச்சு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...