இன்று முதல் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனை கடைகளுக்கு பூட்டு: கிழக்கு ஆளுநர்

Date:

இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்  (கோழிக் கடைகளைத் தவிர) மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று  ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ,  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட விலங்குகள் என்ற போர்வையில் இந்த சடலங்களை சட்டவிரோதமாக வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும், இறைச்சிக் கடைகளில் விற்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே, அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த கால்நடைகளை சட்டவிரோதமாக கொண்டு செல்வதைத் தவிர்க்க, அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அனைத்து கால்நடைகளின் சடலங்களையும் பொது இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...