கடுமையான குளிருடன் கூடிய சுவாச நோய்கள்: மருத்துவர் எச்சரிக்கை

Date:

வளிமண்டலத்தில் தற்போது அதிகரித்துள்ள தூசித் துகள்களால் வைரஸ் காய்ச்சல், குழந்தைப் பருவ ஆஸ்துமா, சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், நீண்டகால சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் இந்த நேரத்தில் தங்கள் உடல் நலம் குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும் விசேட வைத்தியர்  குறிப்பிட்டுள்ளார். .

இந்த நாட்களில் ஆஸ்துமாவுக்கு எடுக்கப்படும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும், இன்ஹேலர் பயன்படுத்தும் நோயாளிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அதையும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றார்.

குளிர் மற்றும் தூசி துகள்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் சூடான ஆடைகளை அணிவதும், பெரியவர்கள் முகக்கவசம் அணிவதும் முக்கியம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழந்தைகளுக்கு வைரஸ் நோய்கள் விரைவாகப் பரவும் என்பதால், இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் உள்ள குழந்தைகளை பள்ளிகள், பாலர் பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பக்கூடாது, ஓய்வெடுக்க வேண்டும்  என மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா போன்ற பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு இந்நிலை நன்கு தெரிந்திருந்தாலும், குளிருக்குப் பரிச்சயமில்லாத பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிக விரைவாக நோய்வாய்ப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...