‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு!

Date:

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில், புத்தளத்தில் மாபெரும் கவியரங்கொன்றை வழங்கவிருக்கின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நிகழ ஏற்பாடாகிவரும் இக்கவியரங்கு, “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!” என்ற கருப்பொருளில் 09 கவிஞர்களின் பிரசன்னத்தில் நடைபெறவுள்ளது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமைகள் பலகோணங்களில் பகிரப்படவுள்ள இக்கவியரங்கில் பின்வரும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந் நிகழ்வு  கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமையில் நடைபெறும்.

வித்தியாசமான தலைப்புகளில் விழுமிய உணர்வுகள் சுமந்து விரிவான ஏற்பாடுகளுடன் தயாராகிவரும் இக்கவியரங்கம், நிச்சயம் நிறைவான பல படைப்புகளை வெளிக் கொணரவிருப்பதோடு அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக ஒரு திறந்தவெளி அரங்கில் மேடைப்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...