இன்று முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்!

Date:

இன்று  முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

கோரப்பட்ட எரிவாயு கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை இன்று காலை சந்தைக்கு விநியோகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...