இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு: நாளை நிந்தவூரில்!

Date:

இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூரின் பங்களிப்புடன் இடம்பெறும் இவ்விழாவில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளை நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின் ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில், தமிழ்கூறு நல்லுலகில் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

அதிதிகளுடன் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையினருக்கான இந்த மாபெரும் மாநாடுக்கு விரும்பியவர்கள் எவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வின் நேரடி ஒலிபரப்பு நாளை காலை 10 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எம்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...