இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு: நாளை நிந்தவூரில்!

Date:

இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூரின் பங்களிப்புடன் இடம்பெறும் இவ்விழாவில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளை நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின் ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில், தமிழ்கூறு நல்லுலகில் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

அதிதிகளுடன் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையினருக்கான இந்த மாபெரும் மாநாடுக்கு விரும்பியவர்கள் எவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வின் நேரடி ஒலிபரப்பு நாளை காலை 10 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எம்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...