உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வைவெட்டுக் கட்டண உயர் நிறுத்துவது குறித்து ஆராய்வு!

Date:

உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்வைத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...