‘ஜனவரியில் அதிகரிக்கும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் ‘

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயமானதும் எனவும், எனவே மக்களுடன் இணைந்து இதனை எதிர்த்துப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது கிடைக்கும் லாபம் மின்சார சபையின் பழைய நஷ்டத்தை ஈடுகட்டவே என்றும், மின்கட்டணத்தை உயர்த்த அரசு பொய்யான தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறுகிறார்.

முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையின் காரணமாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...