பின்தங்கிய கிராமமான ஒட்டுக்குளம் பகுதியிலிருந்து ஒரு மகப்பேற்று மருத்துவர்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணராக ஒட்டுக்குளத்தைச் சேர்ந்த மௌஜுத் எம். பஸீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 29 மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணர்களில் 4ஆம் இடத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டமை பாராட்டத்தக்கதாகும்.

இவரை கௌரவிக்கும் முகமாக ஏ.ஆர்.எம். குடும்பத்தினரால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு நாஸ் கலாசார நிலையத்தில் மௌலவி உவைஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மௌஜுத் எம். பஸீல் முதலாவது மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ‘நியூஸ் நவ்’ சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...