பின்தங்கிய கிராமமான ஒட்டுக்குளம் பகுதியிலிருந்து ஒரு மகப்பேற்று மருத்துவர்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணராக ஒட்டுக்குளத்தைச் சேர்ந்த மௌஜுத் எம். பஸீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 29 மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணர்களில் 4ஆம் இடத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டமை பாராட்டத்தக்கதாகும்.

இவரை கௌரவிக்கும் முகமாக ஏ.ஆர்.எம். குடும்பத்தினரால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு நாஸ் கலாசார நிலையத்தில் மௌலவி உவைஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மௌஜுத் எம். பஸீல் முதலாவது மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ‘நியூஸ் நவ்’ சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...