பிரபல தொழிலதிபர் கொலை: 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்ப்பு!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5 பொலிஸார் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர,  ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களின் ஆதரவுடன் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் கிடைத்த சில தகவல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழன் பொரளை மயானத்திற்கு அருகில் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்ட சம்பவம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...