பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரஞ்சு நிற புடவையில்

Date:

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அனைத்து பெண் எம்பிக்களும் ஆரஞ்சு நிற புடவை அணிந்தபடி காணப்பட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் ஆரஞ்சு நிற புடவையில் உரையாற்றினார்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறை தொடர்பில் அவதானித்த அவைத்தலைவர் சுசில் பிரேமஜயநாத இது தொடர்பில் வினவியுள்ளார்.

“இன்றைய பெண் எம்.பி.க்களின் உடைக்கு பின்னால் ஏதாவது சிறப்பு இருக்கலாம்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆரஞ்சு நிறப் புடவைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தி  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன பதிலளித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...