பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டம்: ஜனாதிபதி

Date:

பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, டிசம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 ஆம் ஆண்டு இலங்கையின் அரச சபையின் முதலாவது பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.

1931 இல் அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆக இருந்தது, கடந்த 91 ஆண்டுகளில் அது 5% ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

மேலும், சனத்தொகையில் பெண்களே பெரும்பான்மையாக உள்ள போதிலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்குமாறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...