மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் ‘9A’ பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Date:

மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இம்முறை (2021) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மற்றும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கமும் இணைந்து இந்த பாராட்டு விழாவை ஏற்பாட செய்துள்ளதாக கஹட்டோவிட்ட MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் பாடசாலைகளில் இம்முறை ‘9 ஏ’ சித்தி பெற்ற மாணவர்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

பாடசாலை அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் பெறுபேற்றையும் விண்ணப்பப்படிவத்தில் மாணவரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

இந்நிகழ்வு எதிர்வரும் 2023 மார்ச் 02 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) கட்டடத்தில் நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், 48/1, ஓகொடபொல வீதி, கஹட்டோவிட்ட

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...