ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

Date:

ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலிருந்து 16 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது மற்றுமொரு  லொறியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...