வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ‘டுபாய் சுத்தா’ கைது!

Date:

செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) அதிகாரிகளால் ‘டுபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் விரைவில் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம், குறித்த நபர் இன்று (28) காலை பணியகத்திற்கு வந்த போது வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...

தவணைப் பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம்...

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழை தொடர்ந்தும் நீடிக்கும்

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது...

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...