‘அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருக்க அல்ல, தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம்’ :பாக். அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Date:

பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை கசாப்புக் கடைக்காரர் என குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கு இது ஒரு புதிய தாழ்வு எனவும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மேக் இன் பாகிஸ்தான் திட்டத்தை நிறுத்திகொள்ள வேண்டும் எனவும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஷாஜியா மாரி “பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது, அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருப்பதற்காக அல்ல, தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் கூறினர்.

எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...