இலங்கையின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டுகிறது!

Date:

பதுளை மற்றும் கேகாலையில் சுற்றுப்புற காற்றின் தரம் குறித்து சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றனர்.

காற்றின் தூசித் துகள்கள் பல உடல்நலப் பிரச்சினைகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில் ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

காலை 8 மணியளவில் பதுளை மற்றும் கேகாலையில் PM2.5க்கான காற்றின் தர சுட்டெண் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா, திருகோணமலை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் இருந்தாலும், கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, குருநாகல், புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் உள்ள உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு இது தீங்கு விளைவிப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பல நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் அண்மைய வாரங்களில் அபாயகரமான நிலைக்கு மோசமடைந்ததை அடுத்து,  மக்கள் முகக் கவசங்களைப் பயன்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...