இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் மட்டும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கைதுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது, 2026: 1,093 வெளிநாட்டவர்கள் (27 சம்பவங்கள்), 2025: 26 வெளிநாட்டவர்கள் (2 சம்பவங்கள்), 2024: 573 வெளிநாட்டவர்கள் (26 சம்பவங்கள்).
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிரப்படுத்தப்பட்ட சோதனைகள், கைதுகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளால் உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகச் சந்தேகநபர்களை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்தார்.
இந்த மோசடிகளால் உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகச் சந்தேகநபர்களை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு விடும் முன் அவர்களின் வியாபார பதிவு மற்றும் அடையாளங்களைச் சரிபார்த்து, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
