‘டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது’

Date:

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், அதன்படி டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

இருப்பினும், மற்ற எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைப்பது போதாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்   தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் புதிய விலை 4,610 ரூபாய். அத்துடன், 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...