மொட்டுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பரந்த கூட்டணிக்கு தயாராகிறது!

Date:

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 15 அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்தப் பேச்சுக்களுக்கு சமாந்தரமாக பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

மேலும், எதிர்வரும் வாரத்தில் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பாரியளவிலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அந்த அரசியல் கட்சிகள் நிச்சயமாக பொதுஜன பெரமுனவுடன் இணையும் எனவும் அறியமுடிகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 15 அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் அரசியல் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேலதிகமாக, கடந்த வாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்களினால் சமகால அரசியல் நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அமைச்சரவை திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...